இயேசுவின் உவமைகள்

Article Body: 

I.தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசித்தல்

1.விதைக்கிறவனும் விதையும்: (மாற்கு.4:3-8; லூக்கா.8:15) - மூன்று வகையான கெட்ட நிலங்கள் மற்றும் மூன்று வகையான நல்ல நிலங்கள் (30, 60 & 100).

2.கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள்: (மத்.22:2-14) - இலவசமாக வழங்கப்பட்ட கலியாண வஸ்திரத்தை அணிய மறுத்த மனிதன்.

3.மணல் மற்றும் கன்மலையின் மேல் கட்டின வீடு: (மத்.7:24-27) – கீழ்ப்படிதல் - ஒரு நல்லதோர் அஸ்திபாரத்தின் முக்கியத்துவம்.

II.விலைகிரையம் செலுத்துதல்

4.அறுவடைக்கு எற்ற பருவகாலம்: (மத்.4:26-29) – ஆவியின் பிரமாணங்களை நாம் பின்பற்றினால், வளர்ச்சி எளிதாகும்.

5.கடுகு மரம்: (மத்.13:31, 32) – செயற்கையான வளர்ச்சியை சாத்தானின் ஏவலர்களை (Agents) நம் நடுவில் குடியேறும்படி அழைக்கிறது.

6.ஒரு கோபுரத்தைக் கட்டுதல்: (மத்.14:28-30) – "சீஷர்களை - உருவாக்குதல்" (வசனம்.26,27,33) மட்டுமே கோபுரத்தை கட்ட உதவும்.

7.சத்ருவை எதிர்த்தல்: (லூக்கா.14:31, 32) - தேவன் ஒரு சிலருடன் இருந்து சத்துருக்கு விரோதமாய் யுத்தம் செய்வார் - அவர்கள் முழு இருதயமுள்ளவர்களாய் இருந்தால்.

8.மறைவான பொக்கிஷம்: (மத்.13:44) – கிறிஸ்தவ வாழ்க்கையில் சிலவற்றுக்காக நாம் விலைகிரயம் செலுத்த வேண்டும்

9.விலையுயர்ந்த முத்து: (மத்.13:45, 46) – எல்லாவற்றிற்கும் மேலாக நம்மில் இயேசுவே விலையேறப் பெற்றவராக இருக்க வேண்டும்.

III.தேவனையும் மனிதரையும் அன்புகூர்தல்

10.இரண்டு கடனாளிகள்: (லூக்கா.7:41-43) – தேவன் மீதான அன்பு, நாம் எவ்வளவு மன்னிக்கப்பட்டோம் என்பதை அறிவதின் மூலமாகவே வரும்.

11.பிறனை மன்னிக்காத வேலைக்காரன்: (மத்.18:23-35) - நாம் எல்லோரையும் மன்னிக்க வேண்டும், ஏனென்றால் நாம் அவ்வளவாய் மன்னிக்கப்பட்டிருக்கறோம்.

12.நல்ல சமாரியன்: (லூக்கா.10:30-37) - நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் தேவைகளைக் குறித்து விழிப்பாய் இருக்க வேண்டும் - முதலாவது நம் குடும்பமே.

13.செம்மறியாடும் வெள்ளாடும்: (மத்.25:31-36) - "நீதிமான்கள்" தேவைகளில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு உதவுபவர்.

IV.பிரமாணத்துவத்தின் ஆபத்து

14.இரண்டு குமாரர்கள்: (மத்.21:28-31) - பரிசேயர்களைப் போலல்லாமல் - நாம் தேவனிடத்தில் சொல்வதை அறிந்துணர்ந்து இருக்க வேண்டும்.

15.குருடனுக்குக் வழிகாட்டும் குருடன்: (லூக்கா.6:39, 40) - நாம் பிரசங்கிக்கிற காரியங்களை நாமே செய்யாவிட்டால், நாம் ஆவிக்குரிய குருடர்.

16.கோதுமையும் களைகளும்: (மத்.13:24-30) - வெளிப்புறத்தில் - மாய்மாலக்காரர்கள் விசுவாசிகளை போலவே இருப்பார்கள்.

17.அத்திப் பழங்கள் இல்லாத அத்திமரம்: (மத்.13:6-9) - அத்தி-இலைகள் மனிதனுடைய நீதியை அடையாளப்படுத்துகின்றன - தேவனால் சபிக்கப்பட்டது.

18.பழைய வஸ்திரத்தில் புதிய வஸ்திரம்: (மத்.9:16) – உங்கள் ஆதாமின் வாழ்க்கையில் கிறிஸ்துவின் ஜீவனை ஒட்டுப் போட முடியாது.

19.பழைய துருத்தியில் புதிய திராட்சைரசம்: (மத்.9:17) - கிருபையானது (புதிய திராட்சைரசம்) மார்க அமைப்பில் பொருந்தாது.

20.புத்தியுள்ள கன்னிகைகளும், புத்தியில்லாத கன்னி கைகளும்: (மத்.25:1-13) – கிறிஸ்துவின் மேலுள்ள நேசத்தினால் (எண்ணெய்) மட்டுமே என்றென்றும் நம் ஒளியைப் பிரகாசிக்க செய்திடும்.

V.நான்கு விதமான பின்மாற்றக்காரர்கள்

21.காணாமல்போன ஆடு: (லூக்கா.15:3-7) - விசுவாசிகளோடு உள்ள ஐக்கிய குறைவு மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையில் கவனக்குறைவின் மூலமாக சிலர் வழி தவறி செல்லுகின்றனர்.

22.காணாமற்போன வெள்ளிக்காசு: (லூக்கா.15:8-10) - சபையின் தோல்வி மற்றும் உதாசீனம் (Neglect) மூலமாக சிலர் வழி தவறி செல்லுகின்றனர்.

23.காணாமல்போன இளையகுமாரன் மற்றும் மூத்தக்குமாரன்: (லூக்கா.15:11-32) - முரட்டாட்டம் மற்றும் ஆவிக்குரிய அகந்தையின் மூலமாக சிலர் வழி தவறி செல்லுகின்றனர்.

24.புளித்த மா: (மத்.13:33) – சீர்கேடு எந்த சபையிலும் எளிதாக பரவிடும், ஆகையால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

VI.ஆவிக்குரிய பெருமை

25.கலியாண விருந்தில் அமறுதல்: (லூக்கா.14:7-11) – இயேசு செய்தது போலவே எப்பொழுதும் தாழ்ந்த இடத்தையே தேடுங்கள்.

26.திராட்சத்தோட்டத்து வேலையாட்கள்: (மத்.20:1-16) – தேவனிடத்தில் தங்கள் வாழ்க்கையின் இறுதியில் வருபவருக்கும் நம்பிக்கை உண்டு.

27.எஜமானனும், அடிமையும்: (லூக்கா.17:7-10) - எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்திருந்தும் நாம் இன்னும் தகுதியற்றவர்களே.

28.பரிசேயன் மற்றும் ஆயக்காரன்: (லூக்கா 18:9-14) - பெருமையுள்ளவர்களுக்கும், மற்றவர்களை இழிவுபடுத்துகிறவர்களுக்கும் தேவன் எதிர்த்து நிற்கிறார்.

29.சந்தை வெளியில் இருக்கும் பிள்ளைகள்: (லூக்கா.7:31-35) - நாம் செய்வது எதுவானாலும் மார்க்கவாதிகள் அதை விமர்சனம் செய்வார்கள்.

VII.விழித்திருந்து ஜெபம் பண்ணுதல்

30.உறுதியான விதவை: (லூக்கா.18:1-8) - ஒரு பலவீனமான விசுவாசி தன்னுடைய பரலோகத் தகப்பனுடன் ஜெபத்தில் மேம்பட முடியும்.

31.உறுதியான அயலான்: (லூக்கா.11:5-8) - மற்றவர்களுக்கு உதவி செய்திட நாம் ஆவியின் வரங்களை நாட வேண்டும்.

32.தகப்பனும் பிள்ளைகளும்: (லூக்கா.11:11-13) - பூமிக்குரிய மிகச்சிறந்த தகப்பனைக் காட்டிலும் தேவன் மேலானவர்.

33.விழித்திருக்கும் வேலையாள்: (மத்.24:45-51; மாற்கு.13:34) – நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - குறிப்பாக காவல்கார்கள்.

34.அத்தி மரமும் பிற மரங்களும்: (லூக்கா.21:29-32) - தங்கள் தேசத்திற்கு இஸ்ரவேலர்கள் திரும்பி வருதலே கிறிஸ்துவின் வருகையின் அடையாளம்.

VIII.தேவனுடைய வரங்களில் உண்மையாய் இருத்தல்

35.பொல்லாத குத்தகைதாரர்: (மத்.21:33-41) - நாம் எல்லோருமே தேவனிடத்தில் கடன் பெற்றுள்ளோம் - அதற்காக நாம் கணக்குக் ஒப்புவிக்க வேண்டும்.

36.மதிகேடான ஐசுவரியவான்: (லூக்கா.12:16-21) – பூமிக்குரிய ஜீவியத்திலும், பொருட்களிலும் தேவனிடத்தில் ஐஸ்வரியவானாய் இல்லாதவன் மதிகேடன்.

37.தாலந்து- 5,2 மற்றும் 1: (மத். 25:14-30) - தேவன் நமக்கு அருளும் சிறு வரங்களில் உண்மையாய் இருத்தல் வேண்டும்.

38.மினாக்கள் - 1 ஒவ்வொருவர்: (லூக்கா.19:12-27) - நேரம் ஒரு வரம், தேவன் நம் எல்லாருக்கும் சமமாகவே பகிர்ந்து அளித்துள்ளார்.

39.நேர்மையற்ற உக்கிராணக்காரன்: (லூக்கா.16:1-8) – பரலோகத்திற்காக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ள பணம் மற்றும் பொருள்களை நாம் பயன்படுத்த வேண்டும்.

40.நல்ல மற்றும் கெட்ட மீன்கள்: (மத்.13:47, 48) – இறுதியில் தேவன் தம் ஜனங்களை மற்றவர்களிடமிருந்து நித்திய நித்தியமாய் பிரித்தெடுப்பார்.