பரிசேயரின் “50” அடையாளங்கள் (சிற்றேடு)

    Download Formats:

அதிகாரம் 0
பரிசேயரின் “50” அடையாளங்கள்

1.பரிசேயர்கள் தேவமனிதர்களோடு தங்களுக்கு உள்ள தொடர்பில் மேன்மை பாராட்டுவார்கள்

"ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்" (மத் 3:9).

2.பரிசேயர்கள் வெளிப்புற நீதியில் மேன்மை பாராட்டுவார்கள்

"வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத் 5:20).

3.பரிசேயர்கள் பாவிகளாகிய ஜனங்களோடு கலந்திருக்க விரும்புவதில்லை

பரிசேயர்கள் சீஷர்களை நோக்கி: "உங்கள் போதகர் ஆயக்காரரோடும், பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்ன? என்று கேட்டார்கள்" (மத் 9:11).

4.பரிசேயர்கள் துறவறம்பூண்ட சன்னியாசிகள் எனத் தங்களை எண்ணிக் கொள்வார்கள்

"பரிசேயர்களாகிய நாங்கள் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர்கள் உபவாசியாமல் இருக்கிறதென்ன?" (மத் 9:14).

5.பரிசேயர்கள் சிறிய விஷயங்களுக்கெல்லாம் குதற்கம் காண்பார்கள்

பரிசேயர்கள் இயேசுவை நோக்கி: "இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே" என்றார்கள் (மத் 12:2).

6.பரிசேயர்கள் "விதிகளை" கடைப்பிடித்து ஜீவிப்பார்கள்

"அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள் (மத் 12:10).

7.பரிசேயர்கள் பொறாமையினாலும் வெறுப்பினாலும் செயல்பட்டார்கள்

"பரிசேயர் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனை பண்ணினார்கள்" (மத் 12:14).

8.பரிசேயர்கள் சந்தேகவாதிகள்! மற்றவர்களைக் குறித்து மோசமானதையே எண்ணிக் கொண்டிருப்பார்கள்!!

"பரிசேயர்கள் அதைக்கேட்டு, இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல! என்றார்கள்" (மத் 12:24).

9.பரிசேயர்கள் தங்கள் சம்பாஷணையில் ஜாக்கிரதை இல்லாதவர்களாய் இருப்பார்கள்

பரிசேயர்கள் அதைக்கேட்டு, "இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல" என்றார்கள் (மத் 12:24).

10.பரிசேயர்கள் மார்க்கத்தின் பெயரில் தங்கள் குடும்பப் பொறுப்புகளை உதாசீனம் செய்வார்கள்

"நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்.... நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம் பண்ணாமல் போகிறீர்கள்" என்றார் (மத் 15:1-9).

11.பரிசேயர்கள் எளிதில் மனம் புண்படுவார்கள்

அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: "பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா" என்றார்கள். அவர் பிரதியுத்தரமாக..... "அவர்களை விட்டுவிடுங்கள்" என்றார்" (மத் 15:12-14).

12.பரிசேயர்கள், ஆவிக்குரிய குருடர்கள்

இயேசு பிரதியுத்தரமாக.... "அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே" என்றார் (மத் 15:14).

13.பரிசேயர்கள், மாய்மாலக்காரர்கள்

"நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்" (லூக்கா 12:1).

14.பரிசேயர்கள், பிறருடைய வார்த்தைகளைக் கொண்டு அவர்களைச் சிக்கவைக்க வகை தேடுவார்கள்

பரிசேயர்கள் அவரைச் சோதிக்க வேண்டுமென்று அவரிடத்தில் வந்து: "புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா" என்று கேட்டார்கள்" (மத் 19:3).

15.பரிசேயர்கள் கடின இருதயம் கொண்டவர்கள்

"இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது" என்றார் (மத் 15:8).

16.கூடிவரும்போது எழுப்பும் பலத்த துதியை பரிசேயர்கள் மெச்சிக் கொள்வதில்லை

"தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று…. ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிராதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு கோபமடைந்தார்கள்" (மத் 21:15).

17.பரிசேயர்களுக்கு வேத அறிவு உண்டு. ஆனால் கீழ்படிவதே இல்லை

"வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்" (மத் 23:2,3).

18.பரிசேயர்கள் தாங்கள் பிரசங்கிப்பதை அப்பியாசப்படுத்துவது இல்லை

"அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்" (மத் 23:3).

19.பரிசேயர்கள் பிறர்மீது பாரமான சுமைகளைச் சுமத்துகிறார்கள்

"சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்" (மத் 23:4).

20.பரிசேயர்கள் மனுஷர்களிடமிருந்து கனத்தைத் தேடுகிறார்கள்

"பரிசேயர்கள் தங்கள் கிரியைகளெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்" (மத் 23:5).

21.உடுத்தும் உடையில் பரிசுத்தம் இருப்பதாக பரிசேயர்கள் எண்ணினார்கள்

"தங்கள் காப்புநாடாக்களை (வேத வாக்கியங்கள் பொறித்த சிறிய பை போன்ற சதுரங்களை நெற்றியில் அணிந்திருப்பார்கள்)அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி இருப்பார்கள்" (மத் 23:5).

22.பரிசேயர்கள் பதவிகளையும், கனத்திற்குரிய பட்டங்களையும் விரும்புவார்கள்

"விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்: நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்" (மத் 23:6-8).

23.பரிசேயர்கள் பிறரைக் கறைப்படுத்துகிறார்கள்

"மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்" (மத் 23:13).

24.பரிசேயர்கள் ஏழை ஜனங்களிடமும் ஆதாயம் தேடுகிறார்கள்

"பரிசேயரே!.... விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்;" (மத் 23:14).

25.பரிசேயர்கள், பொதுவான இடங்களில் நீண்ட கவர்ச்சியான ஜெபங்களைச் செய்வார்கள்

"மாயக்காரராகிய பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணுகிறபடியால்…. அதிக ஆக்கினையை அடைவீர்கள்" (மத் 23:14).

26.பரிசேயர்கள் மிஷனரி ஊழியம் செய்து, அவர்களை இரட்டிப்பான நரகத்தின் மகனாக ஆக்குகிறார்கள்

"மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்" (மத் 23:15).

27.தேவனிடமிருந்து வெளிப்பாடு இல்லாமலே, பரிசேயர்கள் வேத வாக்கியங்களை வியாக்கியானம் செய்வார்கள்

"குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மதிகேடரே, குருடரே…. தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்" (மத் 23:16-22).

28.பரிசேயர்கள் நியாயப்பிரமாண எழுத்துக்களுக்கு பிடிவாதம் கொண்டவர்கள்

"பரிசேயர்களே, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளை விட்டுவிட்டீர்கள்" (மத் 23:23).

29.பரிசேயர்களிடம் நீதி, இரக்கம், உண்மை இருப்பதில்லை

"பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் நீங்கள் செய்திருக்க வேண்டும்...." (மத் 23:23).

30.பரிசேயர்கள் கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறார்கள்

"குருடரான வழிகாட்டிகளே, கொசுகில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்" (மத் 23:24).

31.வெளிப்புறமான நல்ல சாட்சிகள் மாத்திரமே பரிசேயர்கள் அக்கறை

"பரிசேயரே!… போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது" (மத் 23:25,26).

32.மற்றவர்கள் செய்யும் தீமைகளை, தாங்கள் ஒருபோதும் செய்யாததுபோல் பரிசேயர்கள் ௯றுவார்கள்

"பரிசேயரே!.... நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து, எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்" (மத் 23:29,30).

33.தேவனுடைய தீர்க்கதரிசிகளை பரிசேயர்கள் துன்புறுத்துவார்கள்

"இதோ, தீர்க்கதரிசிகளையும்... உங்களிடத்திலே அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்" (மத் 23:34,35).

34.ஜனங்களுடைய அபிப்பிராயங்களில் பரிசேயர்கள் மிகுதியான அக்கறை செலுத்தினார்கள்

"யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்றோ?.... அதற்கு அவர்கள் தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி "மனுஷரால் உண்டாயிற்று" என்று சொல்வோமானால், "ஜனங்களுக்குப் பயப்படுகிறோம்", எல்லாரும் யோவானைத் தீர்க்கத்தரிசி என்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி, இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: "எங்களுக்குத் தெரியாது!" என்றார்கள் (மத் 21:25-27).

35.பரிசேயர்கள் பணத்தை நேசிப்பார்கள்

"பரிசேயர்கள் பொருளாசைக்காரர்கள்!" (லூக்கா 16:14).

36.பரிசேயர்கள் தங்களைப் பிறரைக்காட்டிலும் மேலானவர்களாய் எண்ணியிருப்பார்கள்

"மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, இயேசு ஒரு உவமையைச் சொன்னார். இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன்.... அவன் நின்று; தேவனே! நான் மற்ற மனுஷரைப்போலவும், இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் என்றான்" (லூக்கா 18:9-11).

37.பரிசேயர்கள் தங்கள் சுயநீதியில் நம்பிக்கை வைத்திருந்தார்கள்

"அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்" (லூக்கா 18:9).

38.பரிசேயர்கள் பிறரை அற்பமாய் எண்ணுவார்கள்

"மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, இயேசு ஒரு உவமையைச் சொன்னார்" (லூக்கா 18:9).

39.பரிசேயர்கள் பிறரைக்காட்டிலும் தங்களை உயர்த்துவார்கள்

"அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்" (லூக்கா 18:14).

40.பரிசேயர்கள் தங்கள் செய்கைகளில் மேன்மை பாராட்டுவார்கள்

"தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன்...." (லூக்கா 18:11,12).

41.பரிசேயர்கள் பிறரைக் குற்றம் சாட்டுவார்கள்

"அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை பரிசேயர்கள் அவரிடத்தில் கொண்டுவந்து... போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்... இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்" (யோவான் 8:3-6).

42.பரிசேயர்களுக்கு உண்மையில் சாத்தான் பிதாவாய் இருக்கும் நிலையில் "தேவன் தங்கள் பிதா" என எண்ணிக் கொள்வார்கள்

இயேசு அவர்களை நோக்கி, "தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள்.... நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்: உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்" என்றார் (யோவான் 8:42,44).

43.பரிசேயர்கள் பொய்யரும் கொலைகாரருமாயிருக்கிறார்கள்

இயேசு பரிசேர்களை நோக்கி, "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்" என்றார் (யோவான் 8:44).

44.பரிசேயர்கள் தங்களை கவனித்து கேட்காதவர்களை துன்புறுத்துகிறார்கள்

குருடனாய் இருந்து பார்வை அடைந்தவனிடத்தில் "முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ?" என்று சொல்லி அவனைத் தேவாலயத்திற்குப் புறம்பே பரிசேயர்கள் தள்ளிவிட்டார்கள் (யோவான் 9:34).

45.பரிசேயர்கள், தாங்கள் செய்ய இயலாத அற்புதங்களை, பிறர் செய்வது கண்டு பொறாமைப்படுகிறார்கள்

பரிசேயர்கள் "நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே..." என்றார்கள். அந்நாள் முதல் அவரைக் கொலைச் செய்யும்படிக்கு ஆலோசனை பண்ணினார்கள் (யோவான் 11:47,53).

46.தாங்கள் செய்வதைப் போலவே செய்ய விரும்பாத தேவ பக்தியுள்ள ஜனங்களை பரிசேயர்கள் நியாயந்தீர்க்கிறார்கள்

பரிசேயரில் சிலர்: "அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல" என்றார்கள் (யோவான் 9:16).

47.பரிசேயர்கள் தேவனிடம் அடையாளங்களைக் கேட்டு அவரைச் சோதிக்கிறார்கள்

பரிசேயர்கள் இயேசுவை நோக்கி, "போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்" என்றார்கள் (மத் 12:38).

48.பரிசேயர்களுக்கு பாவிகள் மேல் எந்த அக்கறையும் இருப்பதில்லை

பரிசேயர்கள், "வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்" (யோவான் 7:49).

49.தேவனுடைய வார்தையைக் காட்டிலும், தங்கள் பாரம்பரியங்களுக்கே பரிசேயர்கள் அதிக மதிப்பு கொடுத்தார்கள்

இயேசு பரிசேயர்களை நோக்கி, "நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினீர்கள்!" என்றார் (மாற்கு 7:9).

50.பரிசேயர்கள் தங்களைத் தாங்களே நீதிமான்களாக்கிக் கொள்கிறார்கள்

இயேசு பரிசேயர்களை நோக்கி, "நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது" என்றார் (லூக்கா 16:15).